Tuesday, September 21, 2010

எந்திரன் படத்தின் கதை

ரஜினிக்கு இருக்கும் பல நல்ல குணங்களில் அவர் உண்மையை பட்டென்று கூறி விடுவதும் ஒன்று. ஆனால் இதுவே சில நேரங்களில் சிக்கலில் சென்று விட்டு விடும்.
சிவாஜி திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு ஒரு பேட்டியில் சிவாஜி திரைப்படம் "ப்ளாக் மணி" சம்பந்தப்பட்டது என்று கூறினார். ஜக்குபாய் திரைப்படம் இன்டர்நெட்டில் வெளிவந்தும் அதை பார்ப்பதற்கு ஆள் இல்லை. இந்த நேரத்தில் இன்டர்நெட்டில் ஜக்குபாய் படம் வெளியானதை கண்டித்து ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினி ஜக்குபாய் வாசாபி என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல் என்று கூறினார்.
சமீபத்தில் கூட ஏதோ ஒரு விழாவில் எந்திரன் ஒரு முக்கோண காதல் கதை என்று கூறி இருக்கிறார். இதை மட்டும் வைத்து கொண்டு நாம் எந்திரன் கதையை ஊகித்துள்ளோம். அனைத்தும் கற்பனையே. சரி. இனி எந்திரன் கதையை பார்ப்போம்.

விஞ்ஞானி ரஜினி மிகவும் கஷ்டப்பட்டு ஒரு அவரைப்போன்ற உருவம் கொண்ட ஒரு ரோபோவை உருவாக்குகிறார். அந்த ரோபோ எல்லா வேலையையும் செய்கிறது. அதாவது விஞ்ஞானி ரஜினிக்கு டை கட்டி விடுவது. ஷூ பாலிஷ் போடுவது போன்ற இத்யாதிகள். விஞ்ஞானி ரஜினிக்கு ஒரு காதலி. அவர் தான் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகி அல்லவா. அதனால் ரோபோ ரஜினிக்கு ஐஸ்வர்யா ராய் மீது ஒரு தலை காதல். விஞ்ஞானி ரஜினிக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் காதல் இருப்பதை ரோபோ ரஜினி அறிந்து கொள்கிறது. உருவத்தில் விஞ்ஞானி ரஜினியைப்போல் இருப்பதால் மிகவும் எளிதாக ஐஸ்வர்யா ராயை காதல் செய்யலாம் என எண்ணும் ரோபோ ரஜினி  ஐஸ்வர்யா ராயை காதல் செய்து டூயட் எல்லாம் பாடுகிறது. ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு உண்மை புரிகிறது. அவர் விஞ்ஞானி ரஜினியிடம் அது பற்றி கூறுகிறார். விஞ்ஞானி ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் ரோபோ ரஜினிக்கு அறிவுரை கூறுகிறார்கள். நீ ஒரு எந்திரம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் அதை ரோபோ ரஜினி ஏற்க மறுத்து விடுகிறது. ஐஸ்வர்யா ராய் கிடைக்க மாட்டார் என்ற காரணத்தினால் ரோபோ ரஜினி ஊரெல்லாம் அட்டகாசம் செய்ய ஆரம்பிக்கிறது. ஒரு வழியாக விஞ்ஞானி ரஜினி ரோபோ ரஜினியை செயல் இழக்க செய்கிறார். அதன் பின் எல்லாம் சுபமாக முடிகிறது.

இவ்வளவு சிம்பிளான கதையை யார் பார்ப்பார்கள் என்று எண்ண வேண்டாம். ஷங்கர் எப்போதும் அடுத்தவர்கள் காசில் படம் எடுக்கும் போது பிரம்மாண்டமாக தான் எடுப்பார். போதாக்குறைக்கு சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்து உள்ளார்கள். அதனால் விளம்பரங்களை போட்டு போட்டே படத்தை ஓட்டி விடுவார்கள்.

எது எப்படியோ. இன்னும் சில நாட்களில் படம் வெளிவர உள்ளது. உண்மையான ரிசல்ட் அப்போது தெரியும்.