Friday, July 9, 2010

உலககோப்பை கால்பந்து 2010

உலககோப்பை கால்பந்து போட்டிகள் ஒரு வழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இறுதி போட்டியில் நெதர்லாந்து (ஹாலந்து) அணியும் ஸ்பெயின் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு முன் 3 வது இடத்திற்கான போட்டியும் நடைபெற உள்ளது. இதில் அரையிறுதி போட்டிகளில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த உருகுவே அணியும் ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்த ஜெர்மனி அணியும் மோதுகின்றன.

இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஒரு சிறப்பு அம்சமாக ஆக்டோபஸ் மீனின் கணிப்பு இருந்தது. இங்கிலாந்தில் பிறந்த இந்த மீன் இப்போது ஜெர்மனியில் உள்ள ஒரு தொட்டியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனி அணி விளையாடும் போட்டிகள் குறித்து முன் கூட்டியே முடிவை அறிந்து கொள்ள இந்த மீன் இருக்கும் தொட்டியில் இரு பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவு வைக்கப்படும். ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் ஜெர்மனி நாட்டு கொடியும் மற்றொரு கண்டெய்னரில் ஜெர்மனியுடன் விளையாடும் மற்ற நாட்டு கொடியும் இருக்கும். ஆக்டோபஸ் எந்த கண்டெய்னரில் உள்ள உணவை படர்கிறதோ அந்த அணி வெற்றி பெரும் என்று கணிக்கப்பட்டது.

உலககோப்பை 2010 ஐ பொறுத்தவரை இந்த மீனின் கணிப்பு இதுவரை சரியாகவே இருந்துள்ளது. ஆயினும் கடந்த 2008 ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகளில் இந்த மீனின் கணிப்பு இரு முறை தவறான முடிவை கொடுத்துள்ளது.

இனி நடைபெற இருக்கும் 3 வது இடத்திற்கான போட்டி மற்றும் இறுதி போட்டியில் யார் வெல்வார்கள் என கணிக்க ஆக்டோபஸ் பயன்படுத்தபட்ட போது 3 வது இடத்தை ஜெர்மனியும் இறுதி போட்டியில் ஸ்பெயினும் வெல்லும் என ஆக்டோபஸ் கணித்துள்ளது. ஜெர்மனி அணி தவிர மற்ற நாடுகள் விளையாடும் போட்டியின் முடிவை அறிய ஆக்டோபஸ் பயன்படுத்தபடுவது இப்போது தான்.

http://thatstamil.oneindia.in/sports/fifa-worldcup/2010/09-football-octopus-predicts-spain-win-wc.html

இதற்கிடையே உலககோப்பையை நெதர்லாந்து அணி தான் கைப்பற்றும் என்று சிங்கப்பூரில் உள்ள ஒரு கிளி கணித்துள்ளது. திரு.முனியப்பன் என்பவரிடம் வளர்ந்து வரும் அந்த கிளியின் கணிப்பு சரியாக இருக்குமா அல்லது ஆக்டோபஸின் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://thatstamil.oneindia.in/sports/fifa-worldcup/2010/09-football-singapore-parrot.html

இந்த உலககோப்பையின் சிறப்பு அம்சமாக ஸ்பெயின் அணி முதல் முறையாக இறுதி போட்டியில் விளையாட உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் இது வரை உலககோப்பையை ஐரோப்பிய மண்ணில் தான் வென்றுள்ளார்கள். வேறு எந்த நாட்டில் விளையாடிய போது வென்றதில்லை. முதல் முறையாக ஐரோப்பிய நாடு ஒன்று அந்நிய மண்ணில் கோப்பையை கைப்பற்ற போகிறது. அது நெதர்லாந்தா ஸ்பெயினா என்பது வரும் ஞாயிறு பின்னிரவு (திங்கள் விடியற்காலை) அன்று நடைபெறும் இறுதி போட்டியின் முடிவில் தெரிந்து விடும்.

Wednesday, July 7, 2010

ஜொலிக்காத வாரிசுகள்

தமிழ் சினிமாவில் புகழ் பெற்று விளங்கிய பல நட்சத்திரங்கள் இருந்துள்ளார்கள். ஆனால் அவர்களை போல் அவர்களின் வாரிசுகளால்  பிரகாசிக்க முடியவில்லை. அவர்களைப்பற்றிய ஒரு சிறு கட்டுரை.

ஆனந்தபாபு

ஒரு காலத்தில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்து பின் குணசித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் கலக்கிய திரு. நாகேஷ் அவர்களின் மகனான திரு.ஆனந்தபாபுவால் அவர் தந்தையை போல் புகழ் பெற முடியவில்லை. பாடும் வானம்பாடி, சேரன் பாண்டியன் உள்ளிட்ட சில பேர் சொல்லும் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு போதை மருந்து பழக்கம் இருந்ததாகவும் எயிட்ஸ் இருந்ததாகவும் வதந்திகள் உலா வந்தது. ஒரு வழியாக அதில் இருந்து வெளி வந்தவர் பின் திரு.நாகேஷ் அவர்களின் மரணத்திற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தான் தீ விபத்தில் சிக்கி கொண்டதாக குறிப்பிட்டார். சமீபத்தில் வெள்ளியான ஆதவன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பூபதி - மனோரமா
மனோரமா மிக அதிக திரைப்படங்களில் நடித்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில்  இடம் பெற்றவர். ஆனால் அவர் மகன் பூபதியால் சில படங்களில் கூட நடிக்க முடியவில்லை.

சிபிராஜ் - சத்யராஜ்
வில்லனாக இருந்து பின் கதாநாயகனாக உயர்ந்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்து இருந்த திரு.சத்யராஜ் அவர்களின் மகன் திரு.சிபிராஜ். (இன்று சத்யராஜும் பீல்ட் அவுட் ஆகி இருப்பது வேறு கதை) ஸ்டுடென்ட் நம்பர் 1 , மண்ணின் மைந்தன் என பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் சொல்லி குறிப்பிடும் படி இது வரை எந்த படத்திலும் இவர் நடித்ததில்லை. சத்யராஜின் சொந்த தயாரிப்பான லீ என்ற லீலாதரன் மட்டும் விதிவிலக்கு. இந்த படமும் சுமாரான வெற்றி தான். சமீபத்தில் நாணயம் என்ற படத்தில் சிபி வில்லனாக நடித்திருந்தார்.

சாந்தனு - பாக்யராஜ்
திரைக்கதை அமைப்பதில் இந்தியாவில் நம்பர் 1 என புகழ் பெற்றவர் திரு.பாக்யராஜ். சக்கரகட்டி படம் மூலம் அறிமுகமான அவர் மகன் சாந்தனு நடித்து வேறு எந்த படமும் அதன் பின் வெளிவரவில்லை.

சரண்யா - பாக்யராஜ்
பாக்யராஜின் இயக்கத்தில் பாரிஜாதம் படத்தில் நடித்தார் அவர் மகள் சரண்யா. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.

மனோஜ் - பாரதிராஜா
இயக்குனர் இமயம் பாரதிராஜா தன் மகனை தாஜ்மஹால் என்ற படத்தில் அறிமுகப்படுத்தி இயக்கினார். அது ஊத்திக்கொண்டது. பின் தனது தயாரிப்பில் அல்லி அர்ஜுனா படத்தை சரணின் இயக்கத்தில் எடுத்தார் பாரதிராஜா. அதுவும் பிளாப். மனோஜால் ஒரு ஹீரோவாக வெற்றி பெற முடியவில்லை.

சக்தி - பி.வாசு
தொட்டால் பூ மலரும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சக்தி அதன் பின் சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இன்னும் அங்கீகரிக்கபடாத நடிகராகவே உள்ளார்.

அஸ்வின் சேகர் - S.V.சேகர்
5000 நாடக மேடைகளை கண்ட S.V.சேகர் தனது மகனை வேகம் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த படம் வேகமாய் தியேட்டரை விட்டு தான் ஓடியதே தவிர தியேட்டருக்குள் ஓடவில்லை.

பிரித்விராஜ்- பாண்டியராஜன்
இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜன் மகன் பிரித்விராஜ் "கை வந்த கலை" மற்றும் இன்னொரு படத்தில் நடித்துள்ளார். இவராலும் தந்தையை போல் புகழ் பெற முடியவில்லை.

இவர்களை தவிர பழம் பெரும் நடிகை வைஜயந்தி மாலாவின் மகன் சுசீந்திரா பாலி "நினைத்தாலே" படத்தில் நடித்துள்ளார். பழைய நடிகர் ரவிச்சந்திரன் மகன் சில படங்களில் நடித்துள்ளார். சிவாஜியின் பேரன் என அறிமுகமான துஷ்யந்த் "சக்செஸ்" மற்றும் "மச்சி" படங்களுக்கு பின் காணாமல் போனார். இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

சினிமாவில் பணம் செல்வாக்கு இருந்தால் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும் வேண்டும் என்பதற்கு இவர்கள் ஒரு நல்ல உதாரணம்.