Monday, April 26, 2010

IPL போட்டிகள்

ஒரு வழியாய் IPL போட்டிகள் முடிவுக்கு வந்து விட்டது. இந்த IPL-3 ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெரும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அரையிறுதி போட்டிக்கே தகுதி பெறுமா என்று பலரும் என்னும் அளவிற்கு ஆரம்பத்தில் மோசமாக விளையாடிய சென்னை அணி பின்னர் சிறப்பாக விளையாடி கோப்பையை தட்டி சென்றுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இறுதி போட்டியில் தோற்ற சென்னை அணிக்கு இம்முறை வெற்றி கிட்டியுள்ளது. இது வரை 3 முறை நடந்துள்ள IPL போட்டிகளில் 2  முறை இறுதி போட்டிகளில் விளையாடிய பெருமை சென்னை அணிக்கு மட்டுமே சொந்தம். இது தவிர 3  முறையும் அரையிறுதி போட்டிகளில் சென்னை அணி விளையாடி உள்ளது. இதுவும் வேறு எந்த அணிக்குமே இல்லாத ஒரு விஷயம்.

IPL போட்டிகள் முடிவுக்கு வந்தாலும் அதன் உள்ளே இருக்கும் பல மர்மங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. கோடிக்கணக்கில் ஊழல்கள், அந்நிய செலவாணி மோசடி என்ற பல சிக்கல்களை தாண்டி அது மீண்டு வருமா அல்லது காணாமல் போகுமா என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் வழக்கம் போல் நேர்மையாக விசாரணை நடைபெறாமல் போனாலோ அல்லது நீதி கிடைக்க தாமதம் ஆனாலோ காலப்போக்கில் இதை பலரும் மறந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  மேலும் இந்திய திருநாட்டில் மெகா சீரியல்களை பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருப்பது போல யார் கிரிக்கெட் விளையாடினாலும் அதை பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. கவுண்டமணி ஒரு படத்தில் "வீட்டுல திங்க சோறு இல்ல. அப்புறம் என்ன மயிருக்குடா கிரிக்கெட் ஸ்கோர்" என்று கேட்பார். ஆதலால் இப்போது இருக்கும் சிக்கல்களில் இருந்து IPL மீளாவிட்டாலும் அடுத்த வருடம் அது வெற்றி பெரும் வாய்ப்புகளே அதிகம்.  ஒரு வேலை நேர்மையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கபட்டு அதில் புழலும் கோடிக்கணக்கான பணத்திற்காகவும் அந்நிய செலவாணி மோசடிக்காகவும் IPL போட்டிகள் தடை செய்யப்பட்டால் ஆச்சரியமான ஒன்றாக இருக்கும்.

இந்த IPL சீசன் 3 முடிவுக்கு வந்ததன் மூலம் சினிமாக்கார்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்கள்.  இனி வரும் வாரங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளிவரும். மேலும் இது கோடை விடுமுறை காலமாக இருப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு திரை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

2 comments:

  1. நிறைய எழுதுங்கள் சிவராமன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி. நேரம் கிடைப்பதில்லை. ஆதலால் நிறைய எழுத முடிவதில்லை. ஆயினும், நிறைய எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete